இத்தளம் பற்றி..

இது எனது கவிதைகளுக்கான வலைத்தளம் , இங்கு உங்களின் வருகையினை மதிக்கிறேன். இருண்டு கிடக்கும் இங்குள்ள சூழலிற்குள் உரையாடுவது ஜனாஸாக்களின்/ சடலங்களின் மீதுதான் சாத்தியப்படும் ஒன்றாய் மாறிவிட்டது. சிறு பான்மையினங்களின் மீதான பேரினவாதத்தின் ஆக்கரமிப்புக்கள், சக சிறுபான்மையினை வேரறுக்க துடிக்கும் இன்னொரு சிறு பான்மையின் அதிகாரத் தளத்தின் மீதான எதிர் கதையாடல்கள், முஸ்லிம் தேசத்தின் தளங்கள் எனது பிரதிகளில் நுழைந்து கொள்வதினை தவிர்க்க முடியாததாகி விட்டது. இலக்கியம் நமது வாழ்வின் அனைத்திலும் நுழைந்து விட்டதன் பின், அதிலும் கொலைகளின் தேசத்தில் பூக்களை எப்படிப் பாடுவது. நமக்கு அகப்படும் விடயங்கள் தொடர்பாக முடியுமட்டும் உரையாடுவோம். அது வன்முறையின்றி மூக்கு வரை வந்து போகட்டும். மனம் திறந்து அவரவர் தனித்துவம் போல....

Friday, August 1, 2008

இன்னுமொருவனும் கற்பழித்தான்


எந்த தாட்சன்யமுமின்றி
நான் மீளவும் வல்லுறவுக்குள்ளானேன்.


கேவலத்தால் கசிந்து கிடந்தயென்
கருப்பைக்குச் சொந்தமான குருதியின் சாட்சியாய்
நான் மீளமீள கற்பழிக்கப்பட்டேன்.


ஆயிரம் திசைகளாய் என்னையிழுத்து
அவரவர் விருப்பம் போல்
அக்குள் தொடக்கம் அனைத்தும் வரை
வெறிபிடித்த நாயின் வேகத்தில் குதறித்தள்ளினர்.


நான் பெத்துப் போட்ட பிள்ளைக்கூட்டம்
வாய்பொத்தி சுத்தி நிற்க
என்னை சிதிலமாக்குவதில் அவர்கள் குறியாகினர்.


இடைவேளையின்றி
காபிர்களே படுத்தெழும்பிய என்னில்
சுன்னத் செய்யப்பட்ட கயவனும்
தாரளமாய் விழுந்தெழும்பினான்.


இறுதியாய் இன்று பகலும்,

மூட்ப்படாத நீள ஆடைகளைந்து
அகிம்சா தர்மத்தின் போர்வையும்
என்னைக் குதறியெடுக்க மன்றில் நிற்கிறது.

நான் பெத்துப்போட்ட பிள்ளைக்கூட்டம்
வாய்பொத்தி சுத்தி நிற்க
என்னை சிதிலமாக்குவதில் அவர்கள் குறியாகினர்.

26.05.2008

1 comment:

Mohammed Fasri said...

கேவலத்தால் கசிந்து கிடந்தயென்
கருப்பைக்குச் சொந்தமான குருதியின் சாட்சியாய்
நான் மீளமீள கற்பழிக்கப்பட்டேன்.

Above line caused tears...

எனது வலைத்தளமும் நானும்

My photo
இந்த வலைத்தளங்களினூடாய் பொதுப்பார்வைக்கு எனது செயற்பாடுகளையும் இணைத்துக் கொள்கிறேன். அதி வேகமான வாழ்கைக்குள்ளும் எனது உலகினுள் வருகை தந்தமைக்கு ஜஸாகல்லாஹ் என்பதுடன் வரவேற்கிறேன். தொடர்ந்து உரையாடுவோம்..