இத்தளம் பற்றி..

இது எனது கவிதைகளுக்கான வலைத்தளம் , இங்கு உங்களின் வருகையினை மதிக்கிறேன். இருண்டு கிடக்கும் இங்குள்ள சூழலிற்குள் உரையாடுவது ஜனாஸாக்களின்/ சடலங்களின் மீதுதான் சாத்தியப்படும் ஒன்றாய் மாறிவிட்டது. சிறு பான்மையினங்களின் மீதான பேரினவாதத்தின் ஆக்கரமிப்புக்கள், சக சிறுபான்மையினை வேரறுக்க துடிக்கும் இன்னொரு சிறு பான்மையின் அதிகாரத் தளத்தின் மீதான எதிர் கதையாடல்கள், முஸ்லிம் தேசத்தின் தளங்கள் எனது பிரதிகளில் நுழைந்து கொள்வதினை தவிர்க்க முடியாததாகி விட்டது. இலக்கியம் நமது வாழ்வின் அனைத்திலும் நுழைந்து விட்டதன் பின், அதிலும் கொலைகளின் தேசத்தில் பூக்களை எப்படிப் பாடுவது. நமக்கு அகப்படும் விடயங்கள் தொடர்பாக முடியுமட்டும் உரையாடுவோம். அது வன்முறையின்றி மூக்கு வரை வந்து போகட்டும். மனம் திறந்து அவரவர் தனித்துவம் போல....

Friday, August 1, 2008

அன்றைய மழைக்கு நிறமிருந்த மாலைப்பொழுது

என்னிடமிருந்த வண்ணாத்திகள் சிறகுகள் கொடுக்கப்பட்டு பறந்தன.

காற்று நடந்து சென்ற மென்தடயங்களின் மேலே
கொஞ்சம் கொஞ்சமாக கால் பதித்து
என் வண்ணாத்திகளின் நிழலில் பிரயாணப்பட்டேன்.

என்னிடமிருந்த வண்ணாதிகளின் ஒரு சோடியின் நிழல்
மெல்லிய நீலமாய் அகன்று இருந்தது.

நீண்ட தூரங்கள் கடந்துசென்று
மிகச்சிறிய கடலின் நீண்டவெளியில்
ஒரு கரையில் அதுவிட்ட நுரையில்
ஒரு சோடி வண்ணாத்திகளின் நீலநிழல் அழகாய் படர்ந்தது.

வண்ணாத்திகள் ஓய்விற்காய் ஒதுங்கிய பொழுதன்று
மழைக்கு சொந்தமாய் விதிக்கப்பட்டது.

வண்ணாத்திகள் கூட்டம் எல்லைகளுக்கப்பால்
நீண்டு பயணிக்க விதிக்கப்படுகையில்
ஒரு சோடி வண்ணாத்திகள் மட்டும்
மிகச்சிறிய கடலின் நீண்டவெளியில்
நீல நிழலின் அழகில் நின்றது.

காற்றின் வேகத்தினில் நுரையில் விழுந்த நீல நிழல்
உறுதியாய் நிலைக்குமாறு இறைவனின் விதியமைக்கப்பட்டது.

நிறங்களுடன் பெய்த பெருமழையில்
கறுப்பின் வர்ணங்களிற்கு கூடிய ஆசனங்கள்.

நீல நிழல் நிலைக்க ஒரு சோடி வண்ணாத்திகளின்
ஓய்வுப்பொழுது மழைக்கு விதிக்கப்பட்டது
சிறிய கடலின் நீண்ட வெளியில்
என் ஒரு சோடி வண்ணாத்திகளின் ரூஹ{ பிரியுமாறும் எழுதப்பட்டது.

பெருவெளி இதழ் 05

No comments:

எனது வலைத்தளமும் நானும்

My photo
இந்த வலைத்தளங்களினூடாய் பொதுப்பார்வைக்கு எனது செயற்பாடுகளையும் இணைத்துக் கொள்கிறேன். அதி வேகமான வாழ்கைக்குள்ளும் எனது உலகினுள் வருகை தந்தமைக்கு ஜஸாகல்லாஹ் என்பதுடன் வரவேற்கிறேன். தொடர்ந்து உரையாடுவோம்..