இத்தளம் பற்றி..

இது எனது கவிதைகளுக்கான வலைத்தளம் , இங்கு உங்களின் வருகையினை மதிக்கிறேன். இருண்டு கிடக்கும் இங்குள்ள சூழலிற்குள் உரையாடுவது ஜனாஸாக்களின்/ சடலங்களின் மீதுதான் சாத்தியப்படும் ஒன்றாய் மாறிவிட்டது. சிறு பான்மையினங்களின் மீதான பேரினவாதத்தின் ஆக்கரமிப்புக்கள், சக சிறுபான்மையினை வேரறுக்க துடிக்கும் இன்னொரு சிறு பான்மையின் அதிகாரத் தளத்தின் மீதான எதிர் கதையாடல்கள், முஸ்லிம் தேசத்தின் தளங்கள் எனது பிரதிகளில் நுழைந்து கொள்வதினை தவிர்க்க முடியாததாகி விட்டது. இலக்கியம் நமது வாழ்வின் அனைத்திலும் நுழைந்து விட்டதன் பின், அதிலும் கொலைகளின் தேசத்தில் பூக்களை எப்படிப் பாடுவது. நமக்கு அகப்படும் விடயங்கள் தொடர்பாக முடியுமட்டும் உரையாடுவோம். அது வன்முறையின்றி மூக்கு வரை வந்து போகட்டும். மனம் திறந்து அவரவர் தனித்துவம் போல....

Friday, August 1, 2008

இடைமறிக்கும் உயர்ந்த கோஷங்கள்

அவர்கள் வரப்போவதாய் அனைவரும் பேசிக்கொள்கிறார்கள்

மீண்டும்,
பச்சை மஞ்சள் நீலம் சிவப்பு வெள்ளை என்பனவும்
ஆயிரம் பாகமாய்ப் பிரிந்த நிறங்களும்
அவற்றின் இணையாத கலவைகளும்
பொலீதீன்களோடு இணைந்து கொடிகளாயிற்று.

தலைவர் வருவாராம்
உயர்த கோஷங்களெல்லாம் இடைமறிக்கும்
உணர்சிகள் வீதிகளில் நடமாடும்
மாடு தின்பதற்காய் மதில்களில் போஸ்டர்கள் இருக்கும்.

மிகத்தூரத்தில் அதுவும் வானத்திலிருந்து
மறைந்தவர் கவனிப்பதாய் ஒரு அலங்காரம்

பாவம்,

அவர்கள் மீண்டும் மீண்டும் வருவார்கள்
எல்லாம் மறந்து தனித்துவத்திற்காய் நாமெல்லாம்
உச்ச ஸ்தாயியில் கோஷம் முழங்குவம்.

மீளவும்
மிக இருட்டிய இரவுகளில்
கருமை மேலெழுகிறது விடியலிற்காய்.

2003.07.03
Comments
Blogger அசரீரி said...

01. கால் நூற்றாண்டுக்கு மேலாக
நமது பகல்கள் இப்படித்தானே
பர்ஸான்

"மீளவும்
மிக இருட்டிய இரவுகளில்
கருமை மேலெழுகிறது விடியலிற்காய்"

02. நமது அரசியல் உணர்வு முட்டாள்தனமாய் மட்டுமல்ல அப்பாவித்தனமானதாகவும் ஆக்கப்பட்டிருப்பதை இவ்வரிகள் சொல்வது போலிருக்கிறது எனக்கு..

"மிகத்தூரத்தில் அதுவும் வானத்திலிருந்து
மறைந்தவர் கவனிப்பதாய் ஒரு அலங்காரம்

பாவம்,"
03. வலுவற்ற அரசியல் கொண்ட ஒரு சமுகத்தின் சோகக் கவிதை இது
04. வேறென்ன சொல்வது...?

(சும்மா -நல்ல கவிதை- என்றுவிடுவது என்னை மீறிய வெற்று மதிப்பீடாகிவிடுமோ என்று பயமாகவும் இருக்கிறது)

No comments:

எனது வலைத்தளமும் நானும்

My photo
இந்த வலைத்தளங்களினூடாய் பொதுப்பார்வைக்கு எனது செயற்பாடுகளையும் இணைத்துக் கொள்கிறேன். அதி வேகமான வாழ்கைக்குள்ளும் எனது உலகினுள் வருகை தந்தமைக்கு ஜஸாகல்லாஹ் என்பதுடன் வரவேற்கிறேன். தொடர்ந்து உரையாடுவோம்..