
அதே கோடுகள் விழுந்த முகம்
நினைவுகள் அழிந்திடாமல் கிடந்தது.
மிச்சமிருந்த சில்லறைகளை
நானே பொறுக்கி எடுத்திருந்தேன்.
வறுமையின் துணையுடன்
கை நீட்டி நின்ற அவரில்
ஒட்டியிருந்தது அண்மைக்கான மௌத்தின் செய்தி.
நண்பகல் முழுமையாய் சாய்ந்து
வான் திரை விலகிக் கிடந்த பகல்.
திமிரால் விட்டுச் சென்ற உணவுகள்
மௌத்திற்கு முன் விரும்பி உண்ணப்பட்டன.
என் மனிதம் அப்போதும்
உறங்கிக் கொண்டேயிருந்தது.
21.08.2008
1 comment:
nandraga ullathu. vazhthukal
ennathu kavithaigalai
www.littlebharathi.blogspot.com
itha innaiya thalathil padikavum
Vasanth
Post a Comment