இத்தளம் பற்றி..

இது எனது கவிதைகளுக்கான வலைத்தளம் , இங்கு உங்களின் வருகையினை மதிக்கிறேன். இருண்டு கிடக்கும் இங்குள்ள சூழலிற்குள் உரையாடுவது ஜனாஸாக்களின்/ சடலங்களின் மீதுதான் சாத்தியப்படும் ஒன்றாய் மாறிவிட்டது. சிறு பான்மையினங்களின் மீதான பேரினவாதத்தின் ஆக்கரமிப்புக்கள், சக சிறுபான்மையினை வேரறுக்க துடிக்கும் இன்னொரு சிறு பான்மையின் அதிகாரத் தளத்தின் மீதான எதிர் கதையாடல்கள், முஸ்லிம் தேசத்தின் தளங்கள் எனது பிரதிகளில் நுழைந்து கொள்வதினை தவிர்க்க முடியாததாகி விட்டது. இலக்கியம் நமது வாழ்வின் அனைத்திலும் நுழைந்து விட்டதன் பின், அதிலும் கொலைகளின் தேசத்தில் பூக்களை எப்படிப் பாடுவது. நமக்கு அகப்படும் விடயங்கள் தொடர்பாக முடியுமட்டும் உரையாடுவோம். அது வன்முறையின்றி மூக்கு வரை வந்து போகட்டும். மனம் திறந்து அவரவர் தனித்துவம் போல....

Monday, August 25, 2008

மனதில் நிறைதல்

மிகத் தொலைவான
அதிகாலை பற்றிய நம்பிக்கைகள்
தாளிடப்பட்ட நினைவுகளோடு அடங்கியது.

நான் வரைந்து வரைந்து
எனக்குள்ளே புதைத்துக் கொண்ட
சித்திரங்கள்/ஓவியங்கள்/வாழ்க்கை
வெற்று இரவுகளின் கனவுகளை பரிசளித்தன.

வராதயென் பல்நிறக் கனவுகளின் பின்
ஒற்றை நிறக் கனவுகளின் அச்சம்
முழுமையாய் என்னில் அடர்ந்திற்று.

சரிந்து கிடக்கும் புருவங்களின் கதையாய்
மூட்டைகட்டப்பட்டன.

அச்சமிகுந்த வாழ்வு
அதே வாழ்வாய்ப் பழகிப்போனது.

09.08.2008

1 comment:

Mohammed Fasri said...

Its nice.. congratulation for your poem n I wish you all the best for your successful career... Regards your friend jmfasri (this is to be clear)

எனது வலைத்தளமும் நானும்

My photo
இந்த வலைத்தளங்களினூடாய் பொதுப்பார்வைக்கு எனது செயற்பாடுகளையும் இணைத்துக் கொள்கிறேன். அதி வேகமான வாழ்கைக்குள்ளும் எனது உலகினுள் வருகை தந்தமைக்கு ஜஸாகல்லாஹ் என்பதுடன் வரவேற்கிறேன். தொடர்ந்து உரையாடுவோம்..