
கனவுகளின் எல்லையற்ற மொழியில்
என்னை அழைத்துக் கொள்ள வந்தாய்.
பிரித்துணர முடியாத நிறக்கலவைகளுக்குள்
பிரகாசமாய்ப் பத்திரப்படுத்திய உன்
புன்னகையுடனான நீ
இன்னும் கலைந்து விடாதபடியே
என் கண்கள் திறந்திருக்கின்றன.
பின்வரும் நாட்களில்
என்னையுரசி மொய்த்துக்கிடக்கும் நீதான்
எல்லையற்ற மொழியால்
கனவில் அழைத்தாயென
நீயற்ற ஒருவளிடம் எப்படிச் சொல்வேன்?
என் சொந்தக் கனவுகளில்
நீ குறுக்கிட்டதற்கான தண்டனையாய்
கனவுகளின் நிறத்திலிருந்து பிரித்து
உன்னையிங்கு இருக்கச் செய்துவிடலாம்.
06.10.2009
No comments:
Post a Comment